கலவரம் பயங்கரவாதம் மற்றும் தூக்கு தண்டனை !!!


80 மேற்பட்டோரைக் கொலை செய்த மெர்விக்கிற்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தியுடன் தொடங்குகிறேன். அஜ்மல் கசாப்பிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்ப்பதா வேண்டாமா எனக் கேட்டால் என்னிடம் பதில் சொல்லத் துணிவில்லை. பொதுவில் நான் கொலைத் தண்டனையை எதிர்க்கிறேன். ஏனென்றால் ஏற்கெனவே சொல்லிச் சொல்லி அலுத்துபோன அதே காரணங்களுக்காகத்தான். ராஜீவ் கொலைவழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பொது முழக்காமாக இருந்தது மூவரை விடுவிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், தூக்கு தண்டனையை முற்றிலும் விலக்க வேண்டும் என்பதே. இந்தியா இன்னும் குடிநாயகமாக மாற வேண்டுமேயன்றி, இந்தியாவை விட ஜனநாயகத் தன்மை குறைந்த பாகிஸ்தான், ஈரான் அல்லது இஸ்லாமிய நாடுகள், சீனா போன்று மாறுவதை நான் விரும்ப வில்லை. குறைந்த பட்ச உதாரணமாக நான் காட்டுவது சில ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகள்.

தற்போது கசாப் தூக்கு தண்டனையை 99% பேர் ஆதரிக்கிறார்கள். 0.5% பேர்கள் எதிர்க்கிறார்கள். மீதி 0.5% பேர்கள் மௌனம் காக்கிறார்கள். நான் மூன்றாவது வகை. தூக்கு தண்டனை சரியா என்பது குறித்துப் பல விவாதங்கள் நடந்தாலும் கடைசியில் வேண்டாம் என்ற கட்சியின் பக்கமே சாயத் தோன்றுகிறது. ஏனெனில் கசாப்பிற்காக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், கசாப்பை விட கொடியவர்களையெல்லாம் சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறது. அவர்களே கசாப்பை தூக்கில் போடச் சொல்லும் கொடிய நகைச்சுவையையெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது. கசாப்பை தூக்கில் போட வேண்டும் என்ற வேட்கை அல்லது அறச்சீற்றம் உண்மையாக இருக்கலாம். அதே பல ஆயிரம் பேர்கள் கொல்லப்படக் காரண்மானவர்கள் மீது சிறிய சீற்றம் கூட இருக்கவில்லை இருப்பதில்லை அல்லது விரும்பவில்லை என்பதாலேயே கசாப்பின் தண்டனை அதிகப்படியாகத் தோன்றுகிறது.

கசாப் கொல்லப்படுவதற்கு ஏன் இத்தனை ஆதரவு எனில், அவன் 200 வரை கொல்லப்படக் காரணமானவர்களில் ஒருவன், பாகிஸ்தானியன், பயங்கரவாதி, ஒரு முஸ்லிம். எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாதத் தாக்குதல் என்பது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதனால் எல்லோருக்கும் அதன் மீதான வெறுப்பு ஊட்டப்பட்டது. அவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மோதல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோது ஏற்பட்ட மனநிலையைக் கணக்கில் கொண்டால் தெரியும். அவ்வப்போது மேல்ஜாதி வெறியர்களால் வன்கொடுமை கொலைகள் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதே ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் திருப்பி அடித்தது பெரிய அதிர்ச்சியை அவர்கள் மீதான வெறுப்பை உருவாக்கியது. அதற்குக் காரணம் அது திரும்பத் திரும்பக் காட்டப்பட்டதுதான்.
அதே போல்தான் கசாப் மீதான கருத்தும், நரேந்திர மோடியின் மீதான கருத்தும் வேறுவிதங்களில் எடுத்துக்காட்டப்படுகின்றன.

பயங்கரவாதமும் கலவரமும்

200 பேர்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதல் பயங்கரவாதம் என்று சித்த்தரிக்கப்படுகிறது. அதே 2000 பேர்கள் கொல்லப்பட்ட குஜராத் படுகொலையானது குஜ்ராத் கலவரம் என்றே அழைக்கப்படுகிறது. அதுவும் கர சேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் என்றே செய்திகளில் வாசிக்க நேர்கிறது. அதாவது முஸ்லிம்கள் 50 கரசேவகர்களை எரித்துக் கொன்றனர். அதன் பின்னர் கலவரம் மூண்டது.
இங்கு 50 இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர் என்பது அழுத்தமாகக் கூறப்படுகிறது. பின்பு 2000 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது கலவரம் என்ற சொல்லில் பூசி மெழுகப்பட்டு, அதன் உண்மைத்தன்மை மழுங்கடிக்கப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைக் கொலைகாரர்களாகவும் சித்தரித்து, அவர்களின் பாதிப்பை கலவரம் என்ற சொல்லின் மூலம் எந்த அதிர்ச்சியும், அவமானமும் இந்து மனங்களில் ஏற்காதவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. 

குஜராத் கலவரக்காரர்களிடம் தன்னைக் கொல்ல வேண்டாமென்று கெஞ்சும் குத்புதீன் அன்சாரியின் கண்ணீரும், நரோடா பாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் கண்ணீரும் - இதில் இரண்டாவது படத்திற்குப் பதில் தூக்கு தண்டனைக் கைதி கசாப் கண்ணீர் விட்டு அழுவதைப் போடலாமா ? அதுதானே நியாயம் ?

உண்மை என்பது கரசேவகர்கள் இறந்தது விபத்தினால்தான். ஆனால் குஜராத் படுகொலையை ஆதரிப்பவர்கள் இதைக் முஸ்லிம்கள் நிகழ்த்திய படுகொலை என்று கூறுகிறார்கள். முஸ்லிம்கள் கொல்லப்பட்டத்தை எதிர்வினை என்று கூறுகிறாரகள். சரி அப்படியே பார்த்தாலும் 40 பேரைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை தரவேண்டுமோ அதைவிட 2 மடங்கு அதிக தண்டனைதான் 2000 முஸ்லிம்களைக் கொன்றவர்களுக்குத் தரவேண்டும்.

இதேபோல பாபர் மசூதி இடிப்பின்போது கொல்லப்பட்டவர்களுக்கான நீதியும் எத்தனை கிலோ கிடைத்தது எனத் தெரியவில்லை. ஆனால் குண்டு வெடிப்புகளுக்கு மட்டும் நீதி கிடைத்தது. 3000 சீக்கியர்களை டெல்லியின் தெருக்களில் கொலை செய்து வீசியதால் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை. அதை முன்னின்று நடத்தியவர்கள் எல்லாரும் இயற்கையாகவே இறந்து போனார்கள். மீதமிருப்பவரும் இயற்கையாகவே இறப்பார்கள் யாருக்கும் தூக்கு இல்லை. சிறையும் இல்லை. ராஜீவ் மட்டும் வேறு அரசியல் காரணங்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படி ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்படுவது கலவரம் என்று பூசி மெழுகப்படுகிறது, அதே நேரம் குண்டு வெடிப்புகள் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி அது மிகப்பெரிய எதிர்வினையை உண்டாக்குகிறது. குண்டு வெடிப்புக்களைக் காட்டிலும் மிகப்பெரியா பாதிப்புக்களை ஏற்படுத்தும் கும்பல் கலவரங்கள் மிகச் சாதாரணமாக மறந்து போய்விடுகிறது.

ராஜீவ், அத்வானி, பால்தாக்கரே, மோடி இவர்களின் கட்சிக்காரர்கள், இயக்கத்தவர், அடியாள்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களை நடத்தினார்கள். சீக்கியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இதில் அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டன, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். ஆனால் இத்தலைவர்கள் மீதான வெறுப்புணர்வு என்பது பொதுமக்களிடம் இல்லை.

இதுதான் பாரபட்சமாக இருக்கிறது. இதனால்தான் கசாப்பின் தூக்கு தண்டனையை ஏதோ பெரிய நீதியை நிலை நாட்டி விட்டதாகக் கூறப்படுவதை சகிக்க முடியவில்லை. கசாபின் தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் சூழலிதான் குஜராத் படுகொலை, சீக்கியர் படுகொலை, மும்பை, உத்தரப் பிரதேசத்தில் நடந்த கலவரங்களை நினைவூட்டிக் கொண்டு, அக்குற்றவாளிகளை சுதந்திரமாக அரசியல் நடத்துவதன் மூலம் பாரபட்சமான நீதி வழங்கப்படுகிறதைக் காணலாம்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அதிர வைத்த ஆவணப்படம் !! - பரப்புரை (Propaganda )

சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தைக் காண நேர்ந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஆவணப்படம் வட கொரியாவைச் சேர்ந்தது. வடகொரியா என்பது இணையத்திலேயே கிட்டத்தட்ட எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளாத நாடாகவே இருக்கிறது. எந்த செய்தியும் அங்கிருந்து அடிக்கடி கேள்விப்பட முடிவதில்லை. அணு குண்டு ஆய்வு, அல்லது ஏவுகணை ஆய்வு அது குறித்த வெற்றி தோல்வி என்பதைத் தவிர வேறெந்த செய்திகளும் கிடைத்த பாடில்லை. அதன் அதிபர் இறந்த செய்தியையே உலகிற்கு இரண்டு நாள் கழிந்துதான் அறிவித்தார்கள். அவ்வளவு ஊடக் கெடுபிடிகள் நிறைந்தது.

அது இரும்புத்திரை நாடு, அடக்குமுறை உச்சத்தில் இருக்கும் நாடு, இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு, பசி பட்டினி நிறைந்த நாடு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சுருக்கமாக அது ஒரு பொதுவுடமை நாடு என்று ஊடகங்கள் வாயிலாக அறியப் பெற்றோம்.

அந்த நாட்டைக் குறித்து மேற்கண்ட செய்திகளை உண்மையாக்கும் ஆவணப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அந்நாடே ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அது மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளைப் பற்றி விளக்குகிறது. இதை விடாமல் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது முதல் ஒரு சில நிமிடங்களிலேயே. அது மிகவும் தீர்க்கமாக மேற்கத்திய நாடுகள் செய்யும் அட்டூழியங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறது.

வட கொரியாவின் ஆவணப்படம் என்பதற்காக அது கம்யூனிசப் பெருமைகளைச் சொல்லவில்லை. அதன் அதிபரை அங்கங்கே புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் 2 முறை அவைகளும் வருகின்றன. அது அவ்வளவு மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவில்லை உறுத்தவில்லை. நம்மை மட்டுமே அமெரிக்காவால் அடக்க முடியவில்லை என்று வட கொரியாவையும் அதிபரையும் மக்களையும் புகழ்கிறது. இறக்கும் வரை இவர்களை எதிர்த்துப் போரிடுவோம் என்று சூளுரைக்கிறது. இங்கு கேட்கும் போலிதேசபக்திக் கூச்சலை விட இது எவ்வளவோ மேலானது.

விளம்பரங்கள் ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் அமெரிக்கர்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று காட்டிய விதம் அருமை. மேலும் இது வரலாற்றுச் செய்திகளை போகிற போக்கில் தொடர்பு படுத்தி பல விசயங்களைப் புரிய வைக்கிறது. தற்போதைய வரலாறு முதல் கொலம்பஸ் வரை. பிரிட்டனும் அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் இணைந்து புரிந்த புரியும் வரலாற்றுச் கொடுமைகளைப் புரியவைக்கிறது.

எடுத்துக்காட்டாக,

தன்னை வரவேற்ற மக்களைக் கொலம்பஸ் கொன்று குவித்தது

அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கப்போவதை அறிந்திருந்தும் அதை அனுமதித்தது

ஹிட்லருடனான ராக்பெல்லர், ஸ்காட்லாந்து வங்கி ஆகியோரின் அறக்கட்டளை தொடர்பு

அமெரிக்க உளவு நிறுவனமான் CIA நாஸி விஞ்ஞானிகளை வைத்து நடத்திய ஆய்வுகள்

பாலஸ்தீனம் திருடப்பட்ட வரலாறு

9/11 தாக்குதலின் போது எந்த தாக்குதலும் இல்லாமலே விழும் ஒரு கட்டிடம்

ஜப்பானின் மீதான அணுகுண்டுத் தாக்குதல்

கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கன் உட்பட 37 நாடுகளின் மீதான நேரடியான மறைமுகமான தாக்குதல்

மக்கள் தொகைக் கட்டுப்படுத்தும் திட்டம்

மேலும் சிறப்பம்சமாக நான் காண்பது மதத்தை பயன்படுத்தி மக்களை மயக்கி வைத்திருப்பது என்பதையும் காட்டியது.

பிரபலங்கள் எனப்படும் செலிபிரிட்டிகளை உருவாக்கி மாயையை ஏற்படுத்துதல் செலிபிரிட்டிகள் என்பவர்கள் எந்த ஒரு திறமையுமில்லாதவர்கள் என்று உரைக்கிறது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் முக்கியமாக தென்கொரியாவில் இருக்கின்றவை

எனப் பல செய்திகளைச் சொல்கிறது.

மொத்தமாக இப்படம் 1% பேர் எப்படி மற்ற 99% பேர்களை மயக்கி அவர்களை ஆள்கிறார்கள் என்று விளக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதை இன்னும் யூட்யூப்பில் விட்டு வைத்திருப்பது இன்னொரு ஆச்சரியம்

பார்க்கும் சில படங்களையும் இது போன்ற கருத்துச் செறிவுடைய படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. எச்சரிக்கை மனதைப் பாதிக்கும் காட்சிகளைக் கொண்டது. இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஒலிம்பிக் துளிகள் !!


ஒலிம்பிக் என்பது பரவசப்படுத்தும் விடயமாகும். உண்மையாகவே நாடுகளின் ஒற்றுமை இதனால் ஓங்கா விட்டாலும் அத்தனை நாடுகளிலிருந்து வரும் விதவிதமான முகங்கள், நெகிழ்ச்சியூட்டும் வெற்றிகள், கண்ணீர் சிந்த வைக்கும் தோல்விகள் என பலவகையான பரிமாணங்களைக் கொண்டதுதான் ஒலிம்பிக்.


கடந்த 5 ஒலிம்பிக் போட்டிகளையும் கண்டு வருகிறேன். இதில் அனைத்து போட்டிகளையும் காண்பதில்லை, அறிந்து கொள்ள ஆவலும் இருப்பதில்லை. காண்பதற்கான வாய்ப்பும் முழுவதும் கிடைப்பதில்லை. முன்பு தொலைக்காட்சி இருக்கவில்லை. தற்பொது நேரம் இருப்பதில்லை. இருந்தாலும் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை. முடிவுகளை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் நோக்கம். எனக்குப் பிடித்த போட்டிகள் என்றால் 1996 அட்லாண்டா, 2000 சிட்னி, 2008 பெய்ஜிங் மற்றும் 2012 இலண்டன். ஏதென்ஸில் நடந்த 2004 - ம் ஆண்டு ஒலிம்பிக் குறித்து சரியாக நினைவில்லை.

தற்போதைய ஒலிம்பிக்கில் நினைத்தது போலவே வழக்கம் போலவே அமெரிக்கா முதலிடம் பிடித்து விட்டது. விளையாட்டிற்காக அதிகமாக மெனக்கெடும் நாடு அமெரிக்கா என்பதால் தொடர்ந்து இதை சாதிக்க முடிகிறது. அவ்வளவு பணமும் இருக்கிறது. மற்ற நாடுகள் குறிப்பிட்ட போட்டிகளைத் தவிர அதிகமாக ஆட்டங்களில் கவனமோ கவலையோ கொள்வதில்லை. சீனா தற்போது அதிகமான போட்டிகளை வளர்ப்பதில் மிகப் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

இது வரை அமெரிக்கா 2000 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறது கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில். இது எந்த நாட்டாலும் முறியடிக்க முடியாத சாதனையாகும். இது வரையில் நடை பெற்ற போட்டிகளில் அதிகமான முறை முதலிடம் வகித்த நாடு அமெரிக்காதான். அமெரிக்கா தவிர முதலிடம் பெற்றவை இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா கடந்த ஒலிம்பிக்கில் அவ்வளவுதான். அமெரிக்காவுக்கு சவால் விடுமளவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெல்வது இபோதைக்கு சாத்தியமில்லை. சோவியத் ஒன்றியமுமில்லை. எதிர்காலத்தில் சீனா  வெல்லும் வாய்ப்புக்கள் இருக்கிறது. 1984 ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வாங்கிய சீனா 28 வருடத்தில் 200 வது தங்கப்பதக்கத்தைக் கடந்திருக்கிறது. சென்ற ஒலிம்பிக்கில் முதலிடம் பெற்றது. இது சீனாவின் பிரமாதமான வளர்ச்சி. ஆனாலும் இது குறைவுதான்.

இந்த முறை அதிகமான தங்க, வெள்ளிப்பதக்கங்களை அமெரிக்காவும் அதிக வெண்கலப் பதக்கங்களை ரஷ்யாவும் வென்றுள்ளன. சீனா அதிக  நாட்களாக பதக்கப்பட்டியலில் முதலிடத்திலிருந்தாலும் கடைசி 4 நாட்களில் 10 க்கும் மேற்பட்ட தங்கங்களை வென்று முதலிடம் பெற்று விட்டது. ஒவ்வொரு நாளும் பதக்கப்பட்டியல் மாறிக்கொண்டேயிருக்கிறது. அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் அதிகமான ஆட்களுடன் பங்கேற்பதுதான் கிட்டத்தட்ட 500க்கும் மேலான வீரர்கள் பங்கேற்றார்கள், சீனா சார்பில் பங்கேற்றவர்கள் 400 க்கும் குறைவு.

நீச்சலில் மட்டும் 16 தங்கங்களை அள்ளியிருக்கிறது அமெரிக்கா. பெல்ப்ஸ் & அணியின் வெற்றிகளால். ஆனால் அடுத்த ஒலிம்பிக்கில் இது தொடருமா என்று தெரியாது, இரண்டு ஒலிம்பிக்கிலும் மைக்கேல் ஃபெல்ப்ஸ் மூலம்தான் அமெரிக்கா அதிக பதக்கங்களை வென்றது. அடுத்த முறை இது போன்ற ஒரு அதிசயப் பிறவி கிடைத்தால்தான் அமெரிக்கா வெல்லும்.

18 தங்கம் உட்பட 22 பதக்கங்களுடன் உலக சாதனை படைத்த மைக்கேல் பெல்ப்ஸ் ஓய்வு பெறுகிறார். அடுத்த ஒலிம்பிக்கின் போது அவருக்கு 30 வயதில் நன்றாக நீந்த முடியாதாம். பல வருடப் பயிற்சி, இறுதியில் ஓலிம்பிக் போட்டியில் வென்றால் மட்டுமே புகழ். முப்பது வயதுக்குள் ஓய்வு, ஜிம்னாஸ்டிக் என்றால் 20 வயதுக்குள் ஓய்வு. ஒரு வேளை தோற்றால் அத்தனை உழைப்பும் வீண். வெற்றி பெற்றவர்களே இப்படி அரிதாக நினைவு கொள்ளப்படும்போது, இதில் தோற்றவர்களின் நிலை என்னவாகும்.

சில நிமிடக் காணொளியைக் காட்டினார்கள். வீரர்கள் அழுவதை அவர்கள் தோல்வியாலும் தவறினாலும் வாய்ப்பை இழந்த்தால் அழுததைக் காண எனக்கும் கண்ணீர் முட்டி விட்டது. பொதுவாக எனக்கும் மனவலிமை குறைவு என்பதால் எந்த விளையாட்டுப் போட்டியையும் காண்பதில்லை. ஏதோ ஒரு அணியையோ ஒரு வீரருடனோ மனம் ஒன்றிவிட அவர் தோற்றால் நமக்கு அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என்றாலும் சில போட்டிகளைக் காணாமல் இருக்க முடியவில்லை. அப்படி ஏற்றுக் கொள்ள முடியாத தோல்விகள் டென்னிஸில் ஷரபோவாவும், ஃபெடரரும் கொஞ்சம் கூட போராடாமல் தோற்றது. அடுத்து ஜப்பான் கால்பந்து பெண்கள் அணி இறுதிப் போட்டியில் அமெரிக்காவிடம் தோற்றது.

தடைதாண்டும் போட்டியில் மொனாக்கோ வீராங்கனை பாதியிலேயே காலில் பட்டுவிட்டதால் தரையில் அடித்துக் கொண்டு அழுதது, சீனாவின் தடகள வீர காயம் காரணமாக வெளியேறியது இவர் கடந்த முறையும் காயம் காரணமாக வெளியேறியது இப்படிப் பல.

தடகளம் என்றாலே அது ஜமைக்காவினருக்குத்தான் என்று எழுதி வைக்காத குறை. உசைன் போல்ட் யோஹான் ப்ளாக் என அள்ளி விட்டார்கள். பேட்மிண்டனில் எப்போதும் சீனர்கள். அரையிறுதியில் தோற்ற சீன வீராங்கனைக்கு காயம் காரணமாக வெளியேற சாய்னாவுக்கு ஒரு வெண்கலம் கிடைத்து விட்டது. இம்முறை அதிகம் பதக்கங்கள் பெற்று ஆச்சரியப்படுத்திய நாடுகள் இங்கிலாந்து மூன்றாமிடம் 29 தங்கங்களுடன், அடுத்து தென்கொரியா 13 பதக்கங்களுடன் 5 ஆம் இடம். வட கொரியா முதல் வாரத்திலேயே 4 தங்கம் வாங்கி விட்டது. பின்பு கடைசிவரை மேலும் இரு வெண்கலம் மற்றுமே வெல்ல முடிந்தது. நியூஸிலாந்து 5 தங்கங்களை வாங்கியிருந்தது. பின்பு குண்டு எறியும் போட்டியில் பெலாரஸ் வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டதையடுத்து வெள்ளி வாங்கிய நியூஸி வீராங்கனை தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. மற்ற எல்லா நாடுகளும் குறிப்பிட்டளவு பதக்கங்களை வாங்கியிருந்தன. குட்டி குட்டியான ஐரோப்பிய நாடுகளும் பால்டிக் நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகள், அரேபிய, ஆப்ரிக்க நாடுகள் தலா ஒரு அல்லது இரு  தங்கம் என்ற வகையில் இருந்தன.

வழக்கமாக 10 க்கும் மேலான தங்கப்பதக்கம் வரை வெல்லத் தகுதியான நாடுகள் இம்முறை சோபிக்க முடியவில்லை. ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா க்யூபா ஆகியன. மிகக் குறைவாக வாங்கிய நாடு கிரீஸ் இரண்டே வெண்கலம் மட்டுமே. 


இதுவரை கலந்து கொண்ட ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஒலிம்பிக்கில்  இந்தியா  வளர்ச்சி  கண்டுள்ளது.  நான்  பார்த்த  16  வருட  ஒலிம்பிக்கில்  1996  அட்லாண்டாவில்  லியாண்டர்  பயஸும்(வெண்கலம்),  2000  சிட்னியில்  மல்லேஸ்வரியும்(வெண்கலம்),  2004  ஏதென்ஸில்  ராஜ்யவர்தன்  சிங்  ரத்தோடும்(வெள்ளி)  ஒரு  பதக்கம்  பெற்றவர்கள்.  ஆனால்  2008  பெய்ஜிங்கில்  3  (ஒரு  தங்கம்  இரு  வெண்கலம்) 2 வெள்ளி 3 வெண்கலத்துடன் 55 வது இடம் தங்கம் வாங்காத நாடுகளில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். இதுவே எதிர்பாராத பெரிய வெற்றிதான். இதை வைத்து அதிகமான பதக்கங்களை வாங்கும் என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமுமில்லை. 15 பதக்கங்கள் கூட வெல்லலாம் அல்லது ஒன்று கூட கிடைக்காமல் போகலாம். அதற்கு உதாரணம்தான் கிரீஸ். 

ரோஹுல்லா நிக்பாய்

சீனாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற திபெத் வீராங்கனை, முதல் பதக்கம் வென்ற ஆப்கானிய வீரர் என அங்கங்கே ஆச்சரியத் துளிகள். ஆப்கானில் பிறந்து ஈரானுக்கு அகதியாக வெளியேறி பின் மீண்டும் தாயகம் திரும்பியவர் ரோஹுல்லா நிக்பாய். 1936 லிருந்து பங்கேற்றாலும் ஆப்கன் எந்த பதக்கமும் வாங்கியதில்லை. கடந்த 2008 ஒலிம்பிக்கில் ஆப்கனுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் (வெண்கலம்). இம்முறையும் வெண்கலமும் பெற்றா டேக்வாண்டோ வீரர். ஆர்வமூட்டிய ஒரு வீரர்களில் ஒருவர். இந்தப் புகைப்படம் அவர் 2008 இல் பதக்கம் வென்ற போது ஆப்கானியர்கள் அவரை வரவேற்றுக் கொண்டாடியபோது. வலது புறமிருப்பது தற்போதைய புகைப்படம். இவர் பதக்கம் வென்றதை ஈரானியத் தொலைக்காட்சி ஒன்று இனரீதியாக  மட்டம் தட்டிப்பேசியது. இவர் முடிதிருத்தகராக வேலைபார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இப்படி இன்னும் பல பரவசங்களுடன் மனதைக் கொள்ளையடித்தது இந்த் ஒலிம்பிக்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உலக பயங்கரவாத நாள் ஆகஸ்ட் - 6, 1945

நேற்றைக்கு உலகெல்லாம் நண்பர்கள் நாள் அசத்தலாக கொண்டாடப்பட்டது. ஆனால் இது அரசியல் ரீதியில் இன்றியமையாத நாளாகும். ஏனெனில் இன்றைக்கு சரியாக 67 வருடங்கள் முன்பு இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவில் அணு குண்டு வீசப்பட்டது. 


மனித குலத்திற்கே எதிரான இந்த கொடிய பயங்கரவாதச் செயலை உலகின் கவனத்திலிருந்து படிப்படியாக மறைக்கும் பொருட்டே ஒவ்வொரு வருடமும் உலக அளவில் நண்பர்கள் நான் கொட்டி முழக்கப்பட்டு வருகின்றது.

நான் இன்னொரு தகவலையும் எங்கோ வாசித்தேன். அது உண்மையா பொய்யா என்றும் தெரியாது. இக்குண்டுகள் ஜப்பானின் மீது வீசப்படுவதற்கு முன்பே ஜப்பான் தளபதிகள் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்து விட்டார்களென்றும், அணு குண்டுகளை ஆய்வு செய்வதற்காகவே ஜப்பானின் மீது அமெரிக்கா வீசியது என்பதும் அத்தகவல். இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். 


உலகமெங்கும் அமெரிக்கா நடத்தி வரும் போர் வெறியாட்டங்களை நினைத்துப் பார்த்தால் இது உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. தனது நாட்டின் மீதே தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் விரவிக் கிடக்கின்றன.

ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா என எத்தனை எத்தனை ஆக்ரமிப்புகள் ஈரான், வட கொரியா மீதான  அச்சுறுத்தல்கள்.

இறந்த ஜப்பானியர் நினைவாகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் நம் அனைவராலும் நினைவு கூரப்பட வேண்டிய நாளிதுவாகும். 

புகைப்படங்களுக்கு நன்றி கூகிள், ஃபேஸ்புக்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இந்தியான்னா இந்தியாதான் !! - 2 - ஹாக்கியை தேசிய விளையாட்டாக்கினால்தான் என்ன ?


எப்படா ஏதாவது பதக்கம் கிடைக்கும் என்று கொட்டாவி விட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியர்களின் நிலை. அதே நேரம் சீனர்கள் அமெரிக்காவை விஞ்ச முடியாதே என நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ஏன் சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுகிறேன் என்றால் இவைகளிரண்டும்தான் வருங்கால வல்லரசு என்கிறார்கள். இரண்டு பேருமே தம்மை வல்லரசு என்று காட்டுவதற்கு ஆங்காங்கே படம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சீனா கிட்டத்தட்ட விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவால் எட்ட முடியாத இடத்தை எட்டியிருக்கிறது. உலகிலேயே முதலிடம் ஏறக்குறைய. இந்தியாவால் ஏன் வெல்ல முடியவில்லை என்று புரியாதது போலவே கேட்கிறார்கள். அல்லது அரசியல் வாதிகளைச் சாடுகிறார்கள். ஏன் வாங்க முடியவில்லை அல்லது என்ன காரணம் என்றால் அதுதான் இந்தியா. நாட்டை ரஸ்யாக்காரனுக்கும், அமெரிக்காக்காரனுக்கும் விற்பதில் இந்தியாதான் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கும். ஆனால் விளையாட்டில்தான் பாவமாக இருக்கிறது.

நேற்றைய செய்திகளில் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வில்லை என்று வெளியாகியிருந்தது. இத்தனை வருடங்களாக இதைக்கூட செய்யாமல் இருப்பவர்களால் வேறு என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதைத்தான் கற்பனை செய்ய முடியவில்லை.  ஹிந்தியை தேசிய மொழி என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அப்படி ஒரு குறிப்பும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத போதும், ஒரு அலுவல் மொழியையே தேசிய மொழி போலப் பாவித்து அதைத் திணித்து வருகின்றது நடுவண் அரசு. ஆனால் 60 வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் பெருமையை உயர்த்திய ஹாக்கியை இன்னும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகி வருகின்றது.

1928-முதல் 1956 வரையிலான 18 வருடங்களில் இந்தியாவின் புகழ் ஹாக்கியில் உயரத்தில் இருந்தது 6 தங்கப்பதக்கங்களை வாங்கியிருந்தது. 24 ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை கூட தோற்காமலிருந்தது. அதே இங்கிலாந்துக் காரர்கள் அறிமுகப் படுத்திய கிரிக்கெ இன்று எங்கிருக்கிறது என்பதைப் பார்க்கவும்.

எழவெடுத்த கிரிக்கெட்டுக்கு வாரி வாரி வழங்கும் பணத்தைக் கொஞ்சமாவது இந்த ஹாக்கியை வளர்ப்பதற்குப் பயன்படுத்தினால்தான் என்ன. இது நாள் வரையில் ஊர்பேர் தெரியாத வீரர்களெல்லாம் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய பின்னர்தான் ஊடகங்களில் தெரிய வருகிறார்கள். கிரிக்கேட்டுக்கு மட்டும் விளையாடும் முன்பே அணியில் சேர்க்கப்பட்டுள்ள விவரம் நாடு முழுவது செய்தியாக்கப்படுகிறது. ஹாக்கியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். ஆசியக் கோப்பையை வென்ற போது ஊக்கத்தொகையாக 25000 ரூபாயை அளித்து அவமானப்படுத்தினார்கள். வில்வித்தையில் சாதனை செய்த பெண் வயிற்றைக் கழுவ தனது பயிற்சியாளரால் பரிசளிக்கப்பட்ட வில்லை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை. இன்னொருவர் தன்னைப் பெண்ணாக நிரூபிக்க வேண்டிய நிலை. கபடியில் வென்றவர்களுக்கு மாற்றுடையில்லாமல், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் பணத்தைக் கூட கட்டாத நிலையில் இந்திய விளையாட்டுத் துறை இருக்கிறது.

இவையெல்லாம் ஒரு "ஏழை" நாட்டின் சாபக்கேடாகவோ சாதாரணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டு விடலாம். ஆனால் கிரிக்கெட்காரனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளைக் கேட்டால்தான் பற்றிக் கொண்டு வருகிறது.

தொடர்புடைய பதிவு

இந்தியான்னா இந்தியாதான் !!
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment